Monday, 27 April 2015

http://iqbal-selvan.blogspot.in/2015/04/blog-post_27.html?showComment=1430155445012#c3100016562799564809

அய்யா!கருப்பு என்ற நிறம் ஒரு தாழந்த குறியீடாகவே ஆளும் வர்க்கங்கள் தொடர்ந்து கற்பித்து வருகின்றன.  இதனால் இந்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள   அந்நிறம் உடயவர்கள் படும் பாடு சொல்லி மாளாது அவர்கள்  தங்களை  நிரூபிக்கவே மற்றவர்களை விட கூடுதலாக போராட வேண்டியுள்ளது. மேலும் மிக நெருங்கியவர்கள் கூட சில இடங்களில் புறக்கணிப்பதும் தவிர்ப்பதும் மிக மிக கொடுமையானது  அதனால் அவர்கள்  அந் நிறத்தையே  பெருமையாக எடுத்து கொண்டு ஆளும்வர்க்கத்தின்  பார்வையை உடைக்க போராடவேண்டும்

Friday, 24 April 2015

http://iqbal-selvan.blogspot.in/2015/04/blog-post_51.html?showComment=1429933652662#c1479705725747940251

குத்துன்னா இது குத்து !அய்யா! இன்னும் ஆழமான விளக்கங்கள் பெரியாரும் அம்பேத்கரும் கொடுத்து விட்டு போய் இருக்கிறார்கள் அவற்றையும் இணையுங்கள் ! மேலும் மனுதர்மத்தையும் மேற்கோள் காட்டி எழுதுங்கள்..... வாழ்த்துக்கள்! நன்றி !...  

Thursday, 23 April 2015

http://iqbal-selvan.blogspot.in/2015/04/thanthi-tv-hindutva-pandey.html?showComment=1429808702040#c6807143198161603445

அய்யா! எத்தனை   பாண்டே கள் வந்தாலும் உங்களை போன்றவர்களின் அம்பல படுத்தல்கள் தொடரட்டும்! அசர வேண்டாம்! உங்களை போன்றவர்களே எங்களின் நம்பிக்கை ! 

Sunday, 12 April 2015

http://avargal-unmaigal.blogspot.com/2015/04/ap-police-encounter.html

அய்யாமாருன்களா!உங்கள் வாத விவாதங்களை எல்லாம் பார்க்கும் போது எங்களை விட்டு நீங்கள் எல்லாம் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறீர்கள் என்று மட்டும் தெளிவாக தெரிகிறது ஒருவன் நம் ஊரில் பிறந்த தாலோ நம் மொழி பேசுவதலோ நம்மவன் இல்லை நம் அன்றாட பிரச்னை களை புரிந்தவன் தான் நம்மவன் ஊருலே விவசாயம் இல்ல விளைய வச்சாலும் விலை இல்ல வேற வேலை வாய்ப்பும் இல்ல எங்க ஊருல நாங்க மணல் அல்ல போறோம் எங்க ஆத்துல நாங்க மாட்டு வண்டியிலே  மணல் அள்ளுனா அது மணல் திருட்டாம் ஆனால் டிப்பர் லாரியிலே அள்ளினா அது மணல் குவரியாம் இப்போ நாங்களும் திருடங்கல்யிடோம் எங்களையும் சுட போலிசை அனுப்புங்க