Thursday, 17 January 2013

http://kathirvalaipoo.blogspot.in/2013/01/blog-post_17.html#comment-form

அய்யா ! நீங்கள் பகிர்ந்துள்ள செய்திகள் எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை தான் ஆனால் காணும் அனைவரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் கேவலமான பார்வையையும் உலகில் யாரையும் நம்பகூடாது என்னும்  மனிதர்களை துண்டுதுண்டாக சிதைக்கும் பன்னாட்டு முதலாளித்துவ சதியும் இதனுள் இருக்கிறது  இவர்கள் வைக்கும் புள்ளிவிபரங்கள் எந்த அளவிற்கு உண்மையானது என்பதை கணக்கில் கொள்ள வேண்டும் மேலும் விலங்குகளில் இருந்து மானுடகுல வளர்ச்சி என்பது அவனுடைய சமூக வாழ்வின் மூலமே சாத்தியப்பட்டது அச்சமூக வாழ்வின் ஒரு அடிப்படை அலகே குடும்பம் என்பது இதனை சிதைபதே பன்னாட்டு நிறுவனங்கள் தான் இன்று வேலை வாய்ப்புக்காக கணவன் ஒரு புறம் மனைவி ஒருபுறம் கல்விக்காக குழந்தை ஒரு புறம் என குடும்பங்களை சிதைபதே இவர்கள் தான் இதன் மூலம் குழந்தைகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அன்பு அரவணைப்பு பாதுகாப்பு கிடைக்காமல் செய்வது யார் ?மேலும் அணைத்து பொருட்களையும் போல் அணைத்து  வகைகளிலும் மனித உடலும் நுகர்ச்சிகானதே என்ற கேவலமான கலாச்சாரதை அன்றாடம் ஊடகங்கள் வழியாக பரப்புவது யார் என்பதையும் இணைத்து புரிந்து கொள்ள வேண்டும் 

Monday, 7 January 2013

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22536

அம்மா!இன்றுள்ள சூழலில் மக்கள் போராட வருவதே பெரிய விசயம் அப்படி போராட வருபவர்களை கொச்சை படுத்துவது சரியானது அல்ல அருந்ததி ராய் அவர்கள் என்ன கருத்து சொன்னார் என்று நீங்கள் குறிப்பிட வில்லை மேலும் அருந்ததி ராய் COMMUNISTUM  அல்ல அவர் ஒரு சமூக ஆர்வலராக கருத்துகளை தெரிவிக்கிறார் பெரும்பான்மை அடிப்படை மக்களின் துன்பங்களை பார்த்து வரும் அவருக்கு இது பெரிதாக தெரிய வில்லை போலும்.................. மேலும் அரசும் இப்படி பட்ட அமைபாக்க படாத போரட்டங்களை தான் விரும்புகிறது இது போன்ற போரட்டங்களை எளிதில் நீர்த்து போக செய்ய அரசால் முடியும் ஆகவே சமூக மாற்றங்களை விரும்பும் அமைப்புகள் இது போன்ற போரட்டங்களை புறகனிகாமல் இவற்றுக்கு ஆதரவளிக்கவும் வழிநடத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும் .................................. பின்னூட்டங்களில் கருத்து தெரிவிபவர்கள் வியாசன் போன்ற நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் இவர்கள் மைய பிரச்சனைகளில் இருந்து மடை மாற்றி விடுவதே இவர்களின் பணியாகும்