Friday, 20 March 2015

http://swamysmusings.blogspot.com/2015/03/blog-post_21.html#comment-form

 ////அந்த ஊர் பெண்கள் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுத்தான் அவ்வளவு அழகாக இருக்கிறார்கள்.///                                                                                                ////       ஏனென்றால் அவன் அடிக்கடி கேரளா போய் இந்த நேந்திரன் பழமும் அதைச் சாப்பிட்டு சுந்தரமாய் இருக்கும் சுந்தரிகளும் அவனுக்குப் பரிச்சயம்.///                                                                                                                  அய்யா! நானும் நேந்திரன் பழ ரசிகன் மற்றும் விளைவிப்பவன் தான் .                                                                           நீங்கள்  நேந்திரன் பஜ்ஜியை விட சுந்தரிகளை தான் அதிகமாக ரசித்ததாக தெரிகிறது இந்த வயதிலும் அதற்கான உடல்நிலையும் மனநிலையும் பெற்றிருபதற்காக வாழ்த்துக்கள்    

T.RAJENDAR

மக்கள் காசு வாங்கி கொண்டு ஒட்டு போடுகிறார்கள் உரிமையோடு காசு கேட்கிறார்கள் என்று கூறுபவர்கள், மக்கள் அணிதிரண்டு போராடி இன்று உள்ள சூழ்நிலையில் என்ன மாற்றம் கொண்டுவரமுடியும் என்று கூறுவார்களா ? பிரச்சன்னை என்று தெருவில் இறங்கினால் சம்மந்த பட்ட அதிகாரிகளுக்கு பதில் போலீஸ் தான் வருகிறது! அவர்கள் வந்த உடன் கலைந்து போ என்பது தான் அவர்களின் முழக்கமே! மேலும் புரோக்கர் வேலை எல்லாம் மேல் மட்டத்தில் முடிந்து விட்ட பிறகு போராடி தான் என்ன பலன் ?சுப்ரீம் கோர்டே அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாத பொது சாமானிய மக்களால் என்ன செய்து விட முடியும்? ஆகவே அடிக்கிற கொள்ளையில் தானே கொடுக்கிறான் எதாவது  கொடுக்கட்டுமே என்பது தான் மக்களின் மனநிலை  இதை எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாத போராட்டத்தையே இடைஞ்சலாகவும் சட்டம்  ஒழுங்கு பிரச்சனையாகவும் பார்க்கும்  படித்த மத்திய தர வர்க்கம் உணர வேண்டும் !  

Tuesday, 17 March 2015

http://geethamanjari.blogspot.in/2015/03/6.html?showComment=1426653720861#c8830818599288456006

தோழி,தங்களது தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன், குறிப்பாக ஒண்ட வந்த பிடாரிகள் ஒரு புதிய பார்வையை கொடுக்கிறது. ஏகாதிபத்தியங்களால் பூர்வ குடிமக்கள் மட்டுமல்ல அங்கு வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்பதை காணும் போது ஏகாதிபத்தியங்கள் மானுட குலத்திற்கு மட்டும் அல்ல, ஒட்டு மொத்த உலகிற்கே எதிரானவர்கள் என்பது புரிகிறது அவர்களை  எதிர்த்து அனைத்து துறைகளிலும்  சமரசம் அற்று போராட வேண்டும் என்ற உத்வேகத்தை உங்கள் கட்டுரை தருகிறது ! நன்றி