அய்யா !பாலியல் வன்கொடுமை என்பது ஒரு தனி பிரச்னை அல்ல அது சமூக இயக்கத்தின் ஒரு தொடர்விளைவே பழங்குடி சமூகத்தில் பாலியல் வன்கொடுமை ஏன் இல்லை என்பதை பரிசீலியுங்கள் மனித குலத்தின் ஒரு உன்னதமான பாதுகாப்பான அமைப்பே குடும்பம் இதன் சிதைவே இன்று நாட்டில் நிலவக்கூடிய ஒழுக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு காரணம் குடும்ப அமைப்பை ஜனநாயகமாக மாற்றுவதற்கு பதில் அதனை தன உற்பத்தி முறையின் மூலமும் தன்னுடைய நுகர்விய கலாச்சாரத்தின் மூலமும் சிதைத்து வருகிறது ஏகதிபத்தியம் இன்று கணவனுடன் மனைவி சேர்த்திருக்கும் குடும்பங்களை காண்பதே அரிதாகி விட்டது படித்தவர்கள் வேலை வாய்ப்புக்காக உலகம் முழுக்க விரட்ட படுகிறார்கள் விவசாயயாம் அழிக்கப்பட்டு கிராமங்களில் இருந்து விவசாயிகள் நகரம் நோக்கி விரட்டபடுகிறார்கள் மாணவர்கள் கல்விக்காக குடும்பங்களை பிரிய வேண்டியுள்ளது ஆகவே இது போன்ற குற்றங்களுக்கு தனி மனிதனை மட்டும் குற்றம் சொல்லாமல் ஒட்டு மொத்த சமூக மாற்றத்திற்கு போராடுவோம்
Sunday, 30 December 2012
Wednesday, 19 December 2012
http://nervazhii.blogspot.com/2012/12/blog-post_19.html#comment-form
அம்மா !ஜெயா பச்சன் அவர்கள் இது வரை ஆபாசமாக நடித்து நான் பார்த்தது இல்லை மேலும் திரை உலகத்தினர் கருத்து தெரிவிக்க கூடாது என்பது என்ன நியாயம்அவர்கள் என்னதீண்டததவர்களா மேலும் அவர்கள் மாமனும் மருமகளும் நடனம் ஆடினால் அதற்கான முதிர்ச்சி அவர்களிடம் இருக்கிறது அதை கொச்சைபடுத்தாதீர்கள் உலகத்திலேயே அதிகமான கொலையும் கற்பழிப்பும் செய்தவன் செங்கிஸ்கான் அவன் எந்த சினிமா பார்த்து அப்படி செய்தான் குஜராத்தில் இந்து வெறியர்கள் நடத்திய வெறியாட்டத்தை வெளிகொனர்தது ஒரு இந்தி சினிமா டைரக்டர் தான் குதிரைக்கு சோணம் கட்டினால் போன்ற பார்வையை கை விடுங்கள்
Sunday, 16 December 2012
http://kathirvalaipoo.blogspot.in/2012/12/blog-post_15.html
அய்யா தங்கள் கவிதை கண்களில் நீரை வரவழைத்தது உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்ற பழமொழி கேற்ப இந்த சமூகதிர்ர்க்கு பாடு பட்டவனை நினைத்து பார்க்க கூட இங்கு ஆளில்லை ஆனால் இதற்கான பலனை விரைவில் அனுபவிப்பார்கள் !
Thursday, 13 December 2012
http://lkarthikeyan.blogspot.in/2012/12/blog-post_12.html
அய்யா! அருமையான பதிவு இப்படி இருந்த நாட்டை இன்று பாலைவனமாக்க முயற்சிக்கும் கூட்டத்தை விரட்டி அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தருகிறது உங்கள் பதிவு ! நன்றி
Tuesday, 4 December 2012
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22140
அய்யா விஜய் மற்றும் அனானி........... அவர்களே !உண்மை எப்போதும் நம் விருப்பபடி இருப்பதில்லை ஒரு மாபெரும் சாம்ராஜிய கனவு உள்ளவர் எவராயினும் அவர் ஆதிக்கம் செய்தே அதை அடைய முடியும்...................... ஏன் என்றால் ஒரு இடத்தை வென்று விடலாம் ஆனால் அதை கட்டி காப்பாற்றுவது என்பது நிர்வாகவியல் சம்ந்தபட்டது ராஜராஜனின் வடக்கு படையெடுப்பிற்கு பிறகு அவன் அங்கு நிலவிய நிர்வாக முறையை கனிஷ்கர்களாலும் குப்தார்களாலும் உருவாக்கப்பட்ட (system of revenue ) தான்தமிழகத்தில் அறிமுக படுத்தினான் பின்பற்றினான் (படிக்க ராம் சரண் சர்மா எழுதிய :இந்திய நிலமானிய முறை)............................ மேலும் இதை மெய்பிபதர்கான சான்றுகள் தமிழகம் முழுவதும் விரவி கிடக்கின்றன குறிப்பாக சேர்மாதேவி பக்தவசல்சாமிகொவில் கல்வெட்டு அம்பசமுதரம் பிரமதேசம் கிராமம் அயன் திருவாலீச்வரம் கல்வெட்டு முதலியவை இகல்வெட்டுகளில் பார்பனர்களுக்கும் கோயில்களுக்கும் உழைக்கும் மக்களின் நிலம் பிடுங்கப்பட்டு கொடுக்கப்பட்டதையும் அதை எதிர்த்து உழைக்கும் மக்கள் தீக்குளித்தும் அரசன் கட்டிய கோவிலின் மேல் இருந்து குதித்தும் தற்கொலை செய்து போராடியதையும் குறிபிடுகின்றன எப்போதும் ஆளும் அரசுகளின் பார்வையில் இருந்து வரலாற்றை பார்க்காமல் உழைக்கும் மக்களின் பக்கம் நின்று பார்க்கவும்
Subscribe to:
Comments (Atom)