Thursday, 29 May 2014

http://socratesjr2007.blogspot.in/2014/05/19.html

காவல் துறையை வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல் காட்டும் சினிமா காரர்கள் இனியாவது திருந்துவார்களா ? நீதி கிடைக்க 19 ஆண்டுகள் போராடிய அந்த தாய்க்கு வீர வாழ்த்துக்கள் 

http://vimarisanam.wordpress.com/2014/05/28/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/#comment-6698

vimarisanam - kavirimainthan says:
நண்பர்களுக்கு,
சிலர் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்
என்பது அவர்களது பின்னூட்டங்களின் மூலம் தெரிய
வருகிறது. அநேகமாக இவர்கள் பாஜகவின் அனுதாபிகள்
என்றும் புரிகிறது.
நான் ஏற்கெனவே பலமுறை இந்த வலைத்தளத்தில்
தெளிவு படுத்தி விட்டேன். நான் எந்த கட்சியைச்
சேர்ந்தவனும் அல்ல.எந்த கட்சியின் அனுதாபியும் அல்ல.
அதே போல், பாஜகவுக்கோ, நரேந்திர மோடிக்கோ எதிரானவனும் அல்ல.
நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டபோது இதே
வலைத்தளத்தில் வரவேற்று வாழ்த்துக் கூறி இருந்தேனே.
நான் எழுதும் ஒவ்வொரு இடுகையும், அந்த குறிப்பிட்ட
விஷயத்தைக் குறித்தது மட்டும் தான்.
என் மனதிற்கு சரி என்று தோன்றுவதை ஏற்றுக்கொள்கிறேன். தவறு என்று சொல்வதை கண்டித்து
எழுதுகிறேன். என் நிலை, என் கருத்து தவறு என்று
சிலருக்குத் தோன்றலாம். அது இயற்கை. ஆனால், என்னைப் பொருத்த வரை என் மனசாட்சி சொல்வதைத்தான் நான் செய்கிறேன். என் கருத்தை ஏற்காதவர்களை
நான் எந்தவிதத்திலும் குறை காணவில்லை – அது
அவர்கள் நிலை…அவ்வளவே.
பாஜகவை ஆதரிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.
அதே போல் எதிர்க்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை.
நாளையோ, மறுநாளோ மோடி அவர்களைப் பாராட்டியும்
நான் எழுதக்கூடிய சந்தர்ப்பம் வரும். அப்போது
தயங்காமல் பாராட்டியும் எழுதுவேன். எனவே இதை
யாருக்கும் எதிராக என்று எடுத்துக் கொள்ளாமல்,
குறிப்பிட்ட நிகழ்வுக்காக என்று தான் எடுத்துக்கொள்ள
வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கு, திருமதி சோனியா
காந்தி அவர்களின் தனிப்பட்ட விரோதம் காரணமாக
மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு மூலமாக
பெருத்த துரோகமும், கொடுமையும் இழைக்கப்பட்டது.
அவர்களுக்கு ஏற்பட்டது ஈடு செய்ய முடியாத இழப்பு.
ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்தனர். லட்சக்கணக்கானவர்கள் வீடிழந்தனர். பிழைப்பு இழந்தனர்.
கணவர்களை, மனைவிகளை, குழந்தைகளை
இழந்தனர். சொல்லொணாத்துயர்களுக்கு உள்ளாகினர்.
இனியாவது அவர்கள் நிம்மதியாகவும், கௌரவமாகவும்,
சுதந்திரமாகவும் வாழ வேண்டும்.
ராஜபக்சே ஒரு கொலைகாரன். அவன் ஆட்சியில்
தமிழர்களுக்கு நிம்மதியோ, நியாயமோ கிடைக்காது.
ஐ.நா.சபையில் ஏற்கெனவே பாரபட்சமற்ற, வெளிப்படையான விசாரணை நடத்துவது குறித்து
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த விசாரணை உருப்படியாக நடைபெற
இந்திய அரசு துணை புரிய வேண்டும். வடக்கே மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சுதந்திரமாக செயல்பட,
அதற்கு உண்மையான அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
இலங்கை மீது போர் தொடுக்க வேண்டும் என்றும்
ராஜபக்சேயை இந்திய அரசு கைது செய்ய வேண்டும்
என்றும் விரும்புகிறீர்களா என்று ஒரு நண்பர் தனது
பின்னூட்டத்தில் வினவியுள்ளார். செய்தியை ஊன்றிப்
படிக்காமல், வரலாற்றுப் பின்னணியை அறியாமல் கேட்கப்படும் கேள்வி இது.
இந்திய அரசு எது நியாயம் என்று பாரபட்சமின்றி யோசித்து,
நியாயத்திற்கு துணை நின்றால் போதும். மற்றவை
எது நடக்கவேண்டுமோ அது தானாகவே நடக்கும்.
இலங்கை விஷயத்தில், காங்கிரஸ் அரசு பின்பற்றிய
அதே கொள்கையை பாஜக அரசும் பின்பற்ற வேண்டிய
அவசியம் ஏதும் இல்லை.
இந்த குறிப்பிட்ட இடுகைக்கான காரணம் -
ராஜபக்சேவை இந்திய அரசு பதவியேற்பு விழாவிற்கு அழைத்தது ஒரு தவறான முடிவு என்பதை வலியுறுத்தவே.
நான் எதிர்பார்ப்பது, இனியாவது பாஜக அரசு -
இலங்கை விஷயத்தில் காங்கிரஸ் அரசு சென்ற
அதே வழியில் செல்லாமல், நியாயத்தின் பக்கம்
நிற்க வேண்டும். பாரதத்தின் இலங்கை குறித்த வெளியுறவுக் கொள்கையில் தேவையான மாற்றங்களை
மேற்கொள்ள வேண்டும்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யத் தேவையான
சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு பன்னாட்டு சட்டங்களில் வழி இருக்கிறது.
இது இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக மட்டுமின்றி,
தமிழக மீனவர்களின் நலன்களுக்காகவும்,
இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காகவும் அவசியமான
ஒன்று.
கூடுமான வரை எனக்கான நியாயங்களை, காரணங்களை -
விளக்கி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
இதன் மீதும் உங்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள
விரும்புகிறேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்

http://vimarisanam.wordpress.com/2014/05/28/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/#comment-6698

அய்யா !தங்களது தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன் ஓரிரு முறை பின்னூட்டம் இட்டுள்ளேன் தேர்தலுக்கு முன்பு தமிழர்கள் பிரச்னை களுக்கு கோங்க்றேசே காரணம் அதற்க்கு பா ஜ க தீர்வு என்பது போன்ற சார்புடன் எழுதினீர்கள் ஆனால் தற்பொழுது பா ஜ க துரோகம் செய்வது போல் எழுதுகிறீர்கள் இதற்கு வரும் பின்னூட்டங்களும் உங்களை பொறுத்திருக்கும் படி சொல்கின்றன ………. நிற்க பா ஜ க வின் தலைமை எப்போது தமிழர்களுக்கு ஆதரவாக நின்றது அல்லது தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் உடன் முரண்பட்டு கொண்டது அல்லது கருத்து வேறுபாடு கொண்டது இந்திய தேசியம் பேசும் கட்சிகள் எல்லாம் (சி பி அய்) (சி பி எம் )உட்பட தமிழர்களுக்கு துரோகம் செய்தே வந்துள்ளன …………..ராஜபக்சே அழைக்காமலா வந்தார் அதைகூட வை கோ தான் நடத்திய ஆர்பட்டதிலோ பேச்சிலோ ப ஜ க வை விமர்சிக்கவோ அல்லது முழக்கமிடவோஇல்லை…… தங்களது தற்போதைய பதிவுகளும் அதற்க்கு வரும் பின்னூட்டங்களும் பா ஜ க வின் நிலையையும் அது பற்றிய தமிழ் மக்களின் நிலையை நீர்த்து போக செய்வதாக உள்ளது பரிசீலியுங்கள் ஏன் என்றால் தமிழ் மக்களுக்கு இதற்க்கு மேலும் இழப்பதற்கு ஒன்றுமில்லை

Sunday, 18 May 2014

http://www.nisaptham.com/2014/05/blog-post_17.html#comment-form

எங்கள் ஊரில் இருந்து எட்டாம் கிளாஸ் படித்த பையன் பம்பாய்க்கு பேப்பர் கடைக்கு வேலைக்கு சென்றான் இருபதே நாட்களில் இந்தியை பேச கற்றுக்கொண்டதாக சொன்னான் மேலும்  அவன் படிப்பை நிறுத்த  முக்கியமான காரணம்  இங்கிலீஷ் இப்படி மொழி பலரது படிப்புக்கே உலை வைக்கிறது பத்தாம் கிளாசு பரிட்சையில் அதிகமான பேர் பெயில் ஆவது இங்கிலிஷில்  தாய்மொழியில் பாடங்களை புரியும்படி சொல்லி கொடுத்தால் அவர்கள் பாடத்தில் சிறப்பான வர்களாக வருவார்கள் பிறகு அவர்கள் வேலை செய்ய ஆசைபடும் அல்லது வேலை   கிடைக்கும் நாட்டு மொழியை ஒரு மூன்று அல்லது நான்கு மாதத்தில் கற்று கொடுத்து விடலாம் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்தால் அனைவவரும் தொழில் ரீதியாக சிறப்பான வர்களாக இருப்பார்கள் அப்படி இருந்தால் வேலையும் சுலபமாக கிடைக்கும் அல்லவா 

Thursday, 15 May 2014

http://timeforsomelove.blogspot.in/2014/05/blog-post_14.html

ஒரு மனிதனுடைய எண்ணபோக்கின் மீது  அவன் சார்ந்துள்ள இனத்தின் பண்பாடு கலாச்சாராம் என்ன வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய தூணடுகிறது உங்கள் கதை                                            

http://www.nisaptham.com/2014/05/blog-post_14.html

நரேந்திர மோடி எழுதிய நூல் ஒன்று 2007 ஆம் ஆண்டு வெளி வந்தது. அதன் பெயர் கர்மயோகம். அவர் எழுதிய நூல் என்பதைவிட அவருடைய உரைகளின் தொகுப்பு என்று தான் கூற வேண்டும். அந்த நூலில் தலித் மக்களைப் பற்றி குறிப்பிடும்போது அவர்கள் மலம் அள்ளுதல் போன்ற பணிகளை செய்வதற்குக் காரணம், அவர்கள் அந்தப் பணிகளை புனிதமாகக் கருதுகின்றார்கள். “ஏxபெரிஎன்செ இன் ச்பிரிடுஅலிட்ய்” ஆன்மீக அனுபவம் எனக் கூறுகின்றார். இதனால்தான் அவர்கள் மலம் அள்ளுதல் முதலான தொழில்களை இத்தனை காலமாக செய்கின்றார்களே அல்லாமல் அவர்கள் தங்களுக்கு வேறு தொழில்கள் கிடைக்கவில்லை என்பதனால் அல்ல என்கின்றார்.

[2]“நான் அவர்கள் (தலித்கள்) இந்தப் பணியை தங்கள் வயிறுகளை நிரப்புவதற்காகத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் என நம்பவில்லை. இதற்காகத்தான் அவர்கள் செய்கின்றார்கள் என்றால் நிச்சயமாக அவர்கள் இந்த அசிங்கமான தொழிலை இத்தனை தலைமுறையாகச் செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் இந்த மக்களில் யாருக்கோ, இந்தப் பணியைச் செய்வது மொத்த மனித இனத்திற்கும் செய்திட வேண்டிய பணி என்ற ஞானோதயம் ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான் கடவுள் அவர்கள் மீது பணித்த இந்த கடமையை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மீது கடவுள் அருள் செய்த இந்தக் கடமையைத்தான் அவர்கள் செய்ய வேண்டும். - நன்றி -சரவணன் இது தான் நரேந்திர மோடி யின் கருத்தியல் இதனை கண்டு நாம் பயபடலமா வேண்டாமா ?
Reply

http://maattru.com/5-thinga-can-not-be-changed/

//“இந்தியாவில் இந்துக்கள்தான் பெரும்பான்மையானோர். எனவே அவர்கள்தான் ஆள வேண்டும். அவர்களின் விருப்பங்களைத்தான் மற்றனைவரும் மதிக்கவும் பின்பற்றவும் வேண்டும்”// அய்யா !இது பார்பனியத்தின் கருத்தியல் சிறுபான்மை கருத்தாகிய இதனை பெரும்பான்மை மக்கள் மீது சுமத்தி அவர்களை தான் (பார்பானியம்)அடிமைபடுத்தி இருப்பதை மறைத்து இந்து என்று ஒரு இல்லாத மதத்தை கொண்டு மற்ற அனைவரயும் அடிமைபடுதுவதே பார்பனியத்தின் நோக்கம்