Tuesday, 20 November 2012

http://arulgreen.blogspot.com/2012/11/Dharmapuri-violence-myths-facts.html

அய்யா ! // வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் சுரண்டப்படுகிற சாதிகளின் பட்டியலில்தான் இருக்கிறார்கள். சுரண்டும் சாதிகளாக இல்லை//..................உண்மை ஆனால் பிற்படுத்த பட்டவனுக்கு பொருளாதார ஒடுக்குமுறையும் அதை செய்கின்ற தேசிய ஒடுக்குமுறையும் மட்டும் தான் ஆனால் தாள்தபட்டவனுக்கோ  சாதிய தீண்டாமை கொடுமையும் கூட சேர்கிறது அதனால் தான் தன்  மகள் ஒரு பறையனுடன் திருமணம் செய்வதை தன உயிரை கொடுத்தேனும் தடுக்க வேண்டும் என்று கருதுகிறான் இதே சமயத்தில் ஒரு முதலியருடனோ ,செட்டியாருடனோ காதல்என்றால் இந்த அளவிற்கு எதிர்ப்பது இல்லை காதும் காதும் வைத்தாற்போல் முடித்து.
விடுகிறார்கள் ஆகவே வன்னியர்கள் மற்றும் தாழ்த்த பட்டவர்கள் மீதான ஒடுக்குமுறை என்பது ஒரே தளத்திலானது அல்ல ...........//தருமபுரி கலவரம் தொடர்பான செய்திகளில் பலர் "வன்னிய ஆதிக்க சாதி" என்கிற வார்த்தையை வேண்டுமென்றே பயன்படுத்துகின்றனர். ஆதிக்கம் என்றால் "பிறரைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலை; அதிகாரம் மேலோங்கிய நிலை" என்கிறதுக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.//...............................அய்யா இதற்க்கு நீங்கள் அகராதி எல்லாம் தேடி போக வேண்டாம் களத்திலேயே உண்மை வெட்டவெளிச்சமாய் இருக்கிறது ..........நம் தமிழ்தேசத்தை அடிமை படுத்தி சுரண்டுவது இந்திய தரகு முதலாளிகள்..........அவர்களின் நடைமுறை தத்துவமே பார்பனியம் இந்த தத்துவத்தை கொண்டு இந்த மக்களை பிரித்து ஆள்கிறது பார்ப்பனீயம் இந்த தரகு முதலாளிய பார்பனிய சுரண்டலுக்கு அடியாள் வேலை பார்ப்பது நீயா நானா என்று போட்டி இடுவது தான் இங்குள்ள ஒட்டு பொறுக்கி அரசியல் கட்சிகள் இதில் தங்களது சாதிய சமூக நீதிக்காக களத்திற்கு வந்த அமைப்புகளும் கட்சி ஆரம்பித்து அதே இந்திய தரகு பார்ப்பனியத்திற்கு அடியாள்வேலை  செய்ய போட்டிபோடுகின்றன ஆகவே இங்கு ஆதிக்க சாதி என்பது தன்னை யாருடன் அடையாள படுத்தி கொள்கிறோம் என்பதை பொறுத்ததே அதாவது ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவா அல்லது ஆளும் வர்க்க நலன்களுகாக்வா எதற்காக நிற்கிறோம் என்பதை பொறுத்ததே ஆதிக்க சாதியா அல்லது ஆதிக்கத்தை எதிர்க்கும் சாதியா என்பது ...........................................................................// தருமபுரிக் கலவரம் தொடர்பான வன்னியர்கள் மீதானக் குற்றச்சாட்டுகளில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று தாழ்த்தப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுவது. இதற்கு ஒரு தார்மீக வலிமை இருக்கிறது. அவர்களின் கோபத்தில் நியாயம் இருக்கிறது.////

//ஆனால், உண்மையான ஆதிக்க கூட்டத்தினர் - அதாவது அரசியல் அதிகாரம், நீதித்துறை, பத்திரிகை, அரசு நிருவாகம், பொருளாதார வலிமை என எல்லாவற்றிலும் தமது மக்கள்தொகை விழுக்காட்டை விட மிகக் கூடுதலாக அபகரித்துள்ள சிறுபான்மை சாதிக் கூட்டத்தினர் - தருமபுரி கலவரத்தைக் காரணம காட்டி வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே கசப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் பிரச்சாரம் செய்கின்றனர்//.....................................உண்மைதான் இப்போது தான் நீங்கள் உங்களை சுயவிமர்சனம் செய்து கொண்டு நீங்கள் யார்பக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் பக்கமா அல்லது நீங்கள் குறிபிட்டுள்ள அதிகார வர்கத்தின் பக்கமா எனஉங்கள் நடவடிக்கை மூலம்  தெளிவு படுத்துங்கள் ..................................//குறிப்பாக "கட்டாயக் காதல் - கலப்பு - நாடகத் திருமணங்கள்" நடத்தப்படுவதாக, தமிழ்நாட்டில் பல சமூகத்தவரிடையே மனக்கசப்பு உருவாகியுள்ளது. இதுவே, பல இடங்களில் சமுதாய மோதல்களுக்கு வழிவகுக்கிறது. காதல் திருமணங்கள் தவறு என்று கூற முடியாது. ஆனால், சாதி ஒழிப்பு என்பதை ஒரு நோக்கமாக வைத்து கட்டாய காதல் திருமணங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுமானால் - அவையும் மனித உரிமைகளுக்கு எதிரான நிகழ்வுகளே ஆகும் (இது குறித்து பின்னர் விரிவாக பார்ப்போம்).//..................... விரைவாக எதிர்பார்கிறேன் 

No comments:

Post a Comment